தமிழ்நாடு

tamil nadu

கரும்பு விவசாயிகளுக்கு தீபாவளிக்கு முன்பே நிலுவைத் தொகை!

By

Published : Oct 19, 2019, 9:00 PM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வரும் 21 ஆம் தேதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளன.

before Diwali sugarcane farmers get their due amounts

தமிழ்நாட்டிலுள்ள இரண்டு பொதுத்துறை, 9 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 123 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்காமல் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்தது.

இதுகுறித்து தொடர்போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று சர்க்கரை ஆலைகளின் ஆணையர் கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டும் இன்றுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2018- 19 ஆம் ஆண்டிற்காக நிலுவைத் தொகையான 123 கோடி ரூபாயை வழங்க சர்க்கரை ஆலை அலுவலர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக கரும்பு விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த தொகை வரும் ஆக்டோபர் 21 ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டுவிடும் என்றும் தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன்

இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், பொதுத்துறை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் நிலுவைத் தொகையை வழங்க முன்வந்தாலும் சில தனியார் சர்க்கரை ஆலைகள் 300 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்துள்ளன.

தீபாவளிக்கு முன்பு மாநில அரசு விவசாயிகளுக்கு இந்த தொகையை பெற்றுத்தரவேண்டும். அதேபோல், சர்க்கரை ஆலைகள் தாமதமாக நிலுவைத்தொகை வழங்குவதாலே விவசாயிகள் கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்றும், கடனிற்கான வட்டியினை கரும்பு ஆலைகளே ஏற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க:நிலுவை தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு ஆலைகள்... கட்டிடத் தொழிலாளிகளாக மாறிய விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details