தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 12, 2019, 8:39 PM IST

Updated : Sep 12, 2019, 10:18 PM IST

ETV Bharat / state

அதிமுக பேனர் விழுந்து இளம் பெண் பரிதாப உயிரிழப்பு

சென்னை: இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் மீது பேனர் விழுந்ததில் அவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததால், தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

women

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). இவர் பள்ளிக்கரணை அருகே சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அந்த சாலையின் நடுவில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக அதிமுக பிரமுகர் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது.

இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். சாலையில் கீழே விழந்த அவர் மீது தண்ணீர் லாரி ஏறியது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பேனர் விழுந்து பெண் உயிரிழப்பு

சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பேனர் வைத்தவர்களின் மீது, அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிருக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், லாரி ஓட்டுநர் ஜேக்கப் கைது செய்யபட்டு அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.

தமிழ்நாட்டில் சாலைகளின் நடுவே பேனர்கள் வைக்க நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், பேனரால் ஒரு பெண் உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Last Updated : Sep 12, 2019, 10:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details