தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிமாநிலத்திருந்து சென்னைக்குக் கடத்திவரப்பட்ட குட்கா பறிமுதல்: இருவர் கைது - banned drugs are seized by the police

சென்னை: வெளிமாநிலத்திருந்து சென்னைக்குத் தடை செய்யப்பட்ட குட்காவைக் கடத்திவந்த இருவரைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த 20 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

drugs-
drugs-

By

Published : Jun 2, 2020, 7:24 PM IST

தமிழ்நாட்டில் குட்கா போன்ற போதைப் பொருள்களின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போதைப் பொருள்களுக்குப் பலரும் அடிமையாகியுள்ள நிலையில், அவர்களைக் குறிவைத்து, வெளிமாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக குட்காவை வியாபாரிகள் வாங்கி வந்து கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

சென்னையிலும் இந்த போதைப் பொருள் விற்பனை களைகட்டிவருகிறது. இருப்பினும், இதனை காவல் துறையினர் கண்டுபிடித்து, விற்பனையைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இச்சூழலில், சிலர் சென்னை வால்டாக்ஸ் பகுதியில் போதைப் பொருள்களைக் கடத்திச் செல்வதாக யானைகவுனி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், வால்டாக்ஸ் சாலையில் உள்ள பார்சல் அலுவலகத்தில் சந்தேகத்திற்கிடமாக இருவர் கோணிப்பைகளைத் தூக்கிச் சென்றதைக் கண்டறிந்துள்ளனர்.

பின்னர், அவர்களைப் பிடித்து, அவர்கள் கொண்டுசென்ற பைகளைச் சோதனை செய்ததில், அதில் 20 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஒருவர் யானைகவுனி பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் (42) என்பதும், மற்றொருவர் ஹைதரபாத்தைச் சேர்ந்த சையது ஆரிப் (41) என்பதும் தெரியவந்தது.

மேலும், அவர்கள் வெளிமாநிலத்திலிருந்து பார்சல் மூலமாக தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களைச் சென்னைக்குக் கடத்திவந்ததும் தெரியவந்தது. பின்னர், அவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:220 கிலோ குட்கா கடத்திய நான்கு பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details