சென்னை : பெண் பின்னணிக் குரல் கலைஞர் ஒருவர், தனது காதலன் பல பெண்களை காதலித்து ஏமாற்றியதாகவும், பல வழிகளில் பாலியல் தொல்லைகள் கொடுத்துவிட்டு, தற்போது மீண்டும் வேறொரு பெண்ணை வரும் 16 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக கூறி, அத்திருமணத்தை தடுத்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ நான் திருமணமாகி 2016 ஆம் ஆண்டு விவாகரத்தான பெண். என்னுடைய காதலர் பெயர் விக்ரம் வேதகிரி. அவர் சென்னை திருநின்றவூரில் வசித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு குறும்படம் ஒன்றுக்கு வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் தேவைப்படுவதாக கூறி என்னை அணுகினார். வேலை சார்ந்த விஷயங்களைப் பேசத் தொடங்கி, எனக்கு திருமணமாகி விவாகரத்தானது உட்பட என் சொந்த விஷயங்கள் அனைத்தையும் அவர் தெரிந்துகொண்டார். பின் 2021 ஆம் ஆண்டு நேரில் சந்திக்கத் தொடங்கியதும் விக்ரம் என்னை காதலிப்பதாக தெரிவித்தார்.
அவரது காதலை முதலில் மறுத்த நான் நாளடைவில் கவிதைகள், கவிதை வீடியோக்கள் அனுப்பி அவர் மேற்கொண்ட காதல் நடவடிக்கைகளை ரசிக்கத் தொடங்கி நானும் காதலிக்க தொடங்கினேன். ஆனால் அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், தன்னை அவரின் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவைத்து, தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரகசியமாக திருமணமும் செய்துகொண்டார்.
இந்த கல்யாணத்திற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி என்னுடைய வீட்டில் வந்து தங்கி விரைவில் ஊர் அறிய திருமணம் செய்துகொள்வதாகக் கூறி என்னுடன் பலமுறை உடலுறவு வைத்துக்கொண்டார்.
திருமண ஆசைகாட்டி நிச்சயதார்த்தம் வரை முடிந்த பின்னரும், எல்லோருக்கும் தெரியும்படி திருமணம் செய்துகொள்ளாமல் காலம் தாழ்த்தி என்னுடன் உடலுறவில் மட்டுமே நாட்டம் காட்டி பாலியல் இச்சைகளை என் மீது திணித்து பல வழிகளில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதற்கு நான் மறுத்த போது என்னை தாக்கவும் செய்தார்.
அதைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் நான் காவல்துறையை நாடியபோது விக்ரம் அவரை மன்னித்து விடுமாறு கூறி என்னை தடுத்து நாடகமாடினார் காவல்துறையினரிடம் செல்வதை தடுத்து நிறுத்தினார். ஆனால் தொடர்ந்து விக்ரம் என்னை அவரது பாலியல் இச்சைகளுக்கு இணங்க வைத்ததை பொறுக்க முடியாமல் தட்டிக்கேட்டபோது என்னிடம் சொல்லாமல் தலைமறைவாகி விட்டார். எனது லேப்டேப்-ஐ அவர் உடன் எடுத்துச் சென்றுவிட்டார்.