காஞ்சிபுரம்:உத்திரமேரூர் அடுத்த பெருநகர் மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், அடல் டின்கிரிங் ஆய்வகத்தினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார்.
பிறகு செய்தியாளரிடம் அவர் பேசுகையில், "நவம்பர் மாதத்திலிருந்துதான் பள்ளிகள் தொடங்கப்பட்டன என்ற காரணத்தினால் மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் அடைய கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. அதனால் மாணவர்கள் பொதுத்தேர்வைச் சந்திப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது.
மேலும் பெண்கள் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் (Surveillance camera) அவசியம். அதேசமயம் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு போக்சோ சட்டம் குறித்து போதிய விழிப்புணர்வு உள்ளது. அதே விழிப்புணர்வு தனியார் பள்ளி ஆசிரியர்களிடமும் அதிகரிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.