சென்னை: இந்தியன் ஆயில் நிறுவன டேங்கர் ட்ரக் ஓட்டுநர்கள், கிளீனர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு மது அருந்துவதன் தீமை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதனை தொழில்முறை நாடக கலைஞர்கள் அரங்கேற்றினர்.
குறிப்பாக, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவதால் உண்டாகும் தீமை, குடும்பத்தினருக்கு ஏற்படும் சமூக பொருளாதார பாதிப்பு ஆகியவை குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மேலும், பாதுகாப்பாக வண்டி ஓட்டும் வழிமுறைகள், சாலை பாதுகாப்பு விதிகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில், பறை இசை, ஒயிலாட்டம், கரகம் மற்றும் தெருக்கூத்து உள்ளிட்டவை நிகழ்த்தப்பட்டன.