ஆவடி மாநகராட்சி உட்பட்ட சேக்காடு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருக்குச் சொந்தமான 50 சென்ட் நிலத்தை வீட்டுமனை அங்கீகாரம் பெறுவதற்காக ஆவடி மாநகராட்சியை அணுகியுள்ளார்.
அப்போது அங்கிருந்த ஆவடி மாநகராட்சி மாநகர அமைப்பு ஆய்வாளர் காமத்துரை, வீட்டுமனை பிரிவிற்கு அங்கீகாரம் வழங்க ஆறு லட்சம் ரூபாய் கையூட்டு கேட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ரமேஷ் லஞ்ச ஒழிப்பு அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி லஞ்ச ஒழிப்பு அலுவலர்களின் அறிவுறுத்தலின் படி, ஒரு லட்சம் ரூபாய் முன் பணம் தருவதாக கூறி ஆய்வாளர் காமத்துரையை ஹுந்து கல்லூரி அருகே ரமேஷ் வரவழைத்துள்ளார்.