தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை - Chennai news

சென்னை : கொருக்குப்பேட்டையில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் பாலுவை நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

கொலை
கொலை

By

Published : Nov 5, 2020, 7:53 AM IST

கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் விஜயன். பிரபல ரவுடியான இவரது மகன் பாலு (வயது 30) ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் மாநகராட்சிப் பூங்காவின் அருகில் பாலு தன் ஆட்டோவில் அமர்ந்தபடி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் பாலு

இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்த பாலு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.நகர் காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆர்.கே.நகர் காவல் துறையினர், தப்பியோடிய நான்கு பேர் கொண்ட கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரபல ரவுடியின் மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details