தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொடூரமான படங்களைத்தான் அனைவரும் விரும்புகின்றனர்ள: நடிகர் ஆர்யா கருத்து - சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற டிரெய்லர்

'THE VILLAGE' webseries Trailer release: இயக்குநர் மிலிந்த் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வரும் நவ.24ஆம் தேதி "தி வில்லேஜ்" என்ற வெப் சீரிஸ் ஓடிடி தளங்களில் வெளியாகவிருக்கும் நிலையில், சென்னை சாலிகிராமத்தில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று(நவ.17) நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற "தி வில்லேஜ்" டிரெய்லர் வெளியீட்டு விழா
சென்னையில் நடைபெற்ற "தி வில்லேஜ்" டிரெய்லர் வெளியீட்டு விழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 10:59 PM IST

சென்னை: இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில், "தி வில்லேஜ்" உருவாகியிருக்கும் வெப் தொடர் ஓடிடி (OTT) தளத்தில் வெளியாகவிருக்கிறது. இந்த வெப் தொடரை ஸ்டுடியோ சக்தி புரொடக்சன்ஸ் சார்பில் பி.எஸ்.ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். இந்த தொடர் நவ.24ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்தத் தொடரில் திவ்யா பிள்ளை, ஆலீயா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பூஜா, முத்துக்குமார், கலைராணி, ஜான் கொக்கேன், ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் உள்பட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இந்த வெப் தொடர் நவம்பர் 24ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது. இதுமட்டுமின்றி இந்தத் தொடர் இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகவுள்ளது எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் இன்று(நவ.17) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஆர்யா, ஜான் கொக்கேன், நரேன், தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ் , நடிகைகள் திவ்யா பிள்ளை, கலைராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்யா, "ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எனக்கு இந்த வெப் சீரிஸ் ரொம்ப ஸ்பெஷல். ரொம்ப விஷுவல் ரெப்ரசன்டேசன் அதிகமாக இருந்தது. இதன் பட்ஜெட் என் படங்களை விட மூன்று மடங்கு அதிகம். இந்தியன் ஓடிடி தளத்தில் இப்படியான ஹாரர் கலந்த ஒரு வித்தியாசமான கதை. அதுவும் நமது தூத்துக்குடி பகுதியில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் மிலிந்த் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு பாவனைகளை கொண்டு வருவதற்கு எங்களை கொன்றுவிட்டார். தினமும் 20 மணி நேரம் ஷூட் போகும். மேக்கப் போடவே ரொம்ப கடினமாக இருக்கும். எப்போது தான் படப்பிடிப்பு முடியும் என்று இருந்தது. இந்தப்படம் வெளியாவதற்கே வெற்றி விழா வைக்க வேண்டும். இந்தப்படம் நடித்தது புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. இந்த மாதிரி ஹாரர், த்ரில்லர் முயற்சி பண்ணதில்லை. இது ஒரு கான்செப்ட்(concept) தான்.‌ இப்படியான படங்களுக்கு சவுண்ட் & இசை மிக முக்கியம். இதை கையாள்வது பெரிய டாஸ்க்காக இருந்தது.

இப்போது எல்லோரும் கொடூரமான, ரத்தம் தெறிக்கும் மாதிரியான படங்களை தான் விரும்புகிறார்கள். நமது ஊரில் மண் சார்ந்த கதையாக வெப் சீரிஸ் வந்ததில்லை. இது ஆரம்ப புள்ளியாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் சார்பட்டா ஒரிஜினல் படம். அது வேறு, இது சீரிஸ். இந்த கதையை ஒரு படமாக கண்டிப்பாக எடுக்க முடியாது. ஆனால் அதைக்கடந்து, நிறைய விஷுவல் எஃபெக்ட்ஸ் இருக்கிறது. மேக்கப்பிற்கு மட்டும் 3 கோடி வரை செலவு செய்துள்ளனர். இது ரசிகர்களுக்கு ஒரு வித புதிய அனுபவமாக இருக்கும். இவ்வளவு பெரிய சீரிஸில் நானும் இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி" என உணர்ச்சி பொங்கப் பேசினார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் மிலிந்த் ராவ் பேசுகையில், "4 வருட பயணம் இது. மனிதனின் எமோஷனல் டிராமா. நமது ஊரில் நடக்கும் கதையாக ரசிகர்களுடன் சம்பந்தம் படுத்திக்கொள்ளும் அளவிற்கு இருக்கும். தொடர்ந்து பேசிய நடிகர் ஜான் கொக்கேன், "நடிகர் அஜித் குமாருக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். சார்பட்டா பரம்பரை படத்தில் நானும் ஆர்யாவும் சண்டை போடுவோம். இதிலும் சண்டை போடுகிறோம். மீண்டும் என் மனைவியுடன் சேர்ந்து நடிப்பது ரொம்ப சந்தோஷம். ஆர்யா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி" என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தலைவாசல் விஜய், "ஆர்யா சொன்னதை நான் வழி மொழிகிறேன். ஷூட்டிங் 20 மணி நேரம் போனது. முதல் நாளில் 20 மணி நேரம் ஷூட்டிங் என்றால் பின்னர் 40 நாள் ஷூட்டிங் இருக்கும். அது எப்படி போக போகிறது என்று இருந்தது. செத்து செத்து நடிச்சு சூப்பரா படத்தை முடித்திருக்கோம்" என பேசியதில் அங்கிருந்த அனைவரது மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஹாரர் படம் என்பதனால் ஓடிடி ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கான வரவேற்பு சற்று அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 32 இடங்களில் 'தளபதி விஜய் நூலகம்' திறப்பு - புஸ்ஸி ஆனந்து வெளியிட்ட தகவல்

ABOUT THE AUTHOR

...view details