தமிழ்நாட்டில் கரோனா பரவல் படிபடியாகக் குறைந்து வந்தாலும், உலக நாடுகள் மத்தியில் இரண்டாவது அலை உச்சத்தை எட்டியுள்ளதால், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசும் மருத்துவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் தற்போது தொடர் பண்டிகைக் காலம் என்பதால் பொது மக்கள் கரோனா வைரஸ் பயத்தை மீறி பண்டிகைக் கால உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.
அந்த வகையில் நாடு முழுதும் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை வருவதற்கு இன்னும் 13 நாள்களே உள்ள நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று (நவ.01) சென்னை தியாகராய நகரில் தீபாவளி விற்பனை களைக்கட்டியுள்ளது.