சென்னை:கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் சு.செல்வம் காந்தி ஜெயந்தி முன்னிட்டு 'ஒற்றுமையே வலிமை' என்பதை வலியுறுத்தி பிரஷ்க்கு பதிலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் "மதக் குறியீடுகள் பயன்படுத்தி காந்தி ஓவியத்தை வரைந்தார்.
தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி, தற்போது குஜராத்தின் ஒரு பகுதியாக இருக்கும் போர் பந்தரில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு அவரது 154வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும், வாழ்க்கைக்கான அவரது தத்துவங்களுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்த, பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், காந்தி ஜெயந்தி ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் மக்கள் மொழி, மதம், கலாச்சாரம், பண்டிகைகள் போன்றவற்றில் வேறு பட்டவர்கள், இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், குறிப்பிடத்தக்க ஒற்றுமை உணர்வு நம்மிடையே நிலவுகிறது. அதனால்தான் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் தேசமாக உலகின் முன் முன்வைக்கப்படுகிறது. இத்தனை வேறுபாடுகள் இருந்தபோதிலும் இந்தியாவில் அனைவரும் தேசத்தின் மீது மிகுந்த அன்புடன் வாழ்கின்றனர்.