தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரி ஏய்ப்பு புகார் - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரன்ட்

சென்னை: வருமான வரி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Nov 18, 2019, 12:26 PM IST

Updated : Nov 18, 2019, 1:02 PM IST

ke-gnanavel-raja

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா, தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து, குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக கேள்விகளைக் கேட்டுப் பதிவு செய்யும் நடைமுறைக்காக ஞானவேல் ராஜாவை ஆஜராகக் கோரி, எழும்பூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.

பல முறை வாய்ப்பளித்தும் ஞானவேல் ராஜா ஆஜர் ஆகாததால், அவருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என வருமானவரித் துறை தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா

இதை ஏற்றுக் கொண்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ஞானவேல் ராஜாவுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். பின், இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க...

இருவர் இணைந்தால் தமிழர்களுக்கு நல்ல காலம் - எஸ்.ஏ.சி ஆருடம்

Last Updated : Nov 18, 2019, 1:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details