சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ் முத்து, தனது பேஸ்புக் பக்கத்தில் சாத்தான்குளம் நிகழ்வை பற்றி ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். அப்பதிவானது காவல் துறைக்கு களங்கத்தினை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இப்பதிவிற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்தச்சூழ்நிலையில், தனது பேஸ்புக் கணக்கு எண், அதன் இரகசிய குறியீடு(Password) ஆகியவற்றை தனது நண்பர்களிடம் பகிர்ந்திருந்ததாகவும், தனக்கு தெரியாமல் யாரோ அப்பதிவினை பதிவிட்டுள்ளதாகவும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.