சென்னை: கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குநரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பொறியியல் சேர்க்கைக்கு 42ஆயிரத்து 716 பேர் இன்று வரை விண்ணப்பங்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஜூலை கடைசியில் CBSE ரிசல்ட் வரும் என்று சொல்கிறார்கள். இவ்வளவு தாமதமானால் மாணவர் சேர்க்கைக்கு தாமதம் ஏற்படும். CBSE தேர்வு முடிவுகள் வந்த பின்னர் அடுத்த 5 நாள்களுக்கு கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு செய்ய நாள்கள் நீட்டிக்கிறோம். ஆனால் கவுன்சிலிங் தேதி மாற்றப்படாது” என தெரிவித்தார்.