தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2020, 10:26 PM IST

ETV Bharat / state

முதலமைச்சருக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறிய ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் !

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொலைபேசி மூலம் அழைத்து ஆறுதல் கூறினார்.

ap-cm-jagan-mohan-called-tn-cm-palanisamy-in-phone-to-convey-his-condolence
ap-cm-jagan-mohan-called-tn-cm-palanisamy-in-phone-to-convey-his-condolence

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93), கடந்த வாரம் வயது முதிர்வு காரணமாக காலமானார். இதனால் பல்வேறு கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று (20.10.2020) தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க:தெலங்கானா வெள்ளத்திற்கு ரூ.10 கோடி நிதி: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details