தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 23, 2021, 7:10 AM IST

ETV Bharat / state

கூட்டுறவு அங்காடிகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை; ரூ. 2.15 லட்சம் பறிமுதல்!

சென்னை: பல்வேறு பகுதிகளிலுள்ள கூட்டுறவு அங்காடி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 2.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Anti corruption department raids co operative stores in Chennai; 2.15 lakh confiscated!
Anti corruption department raids co operative stores in Chennai; 2.15 lakh confiscated!

சென்னையில் இயங்கி வரும் கூட்டுறவு அங்காடியில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு பொருள்கள் விற்பனை செய்வதாக நுகர்வோர் பலர் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையிடம் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென்று நேற்று (ஜன. 22) திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள நுகர்வோர் கூட்டுறவு சங்கம் அலுவலகம், தாம்பரம், பெரியார் நகர் போன்ற இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் திருவல்லிக்கேணி கூட்டுறவு அங்காடியின் விற்பனை உதவியாளர் சரவணனிடமிருந்து கணக்கில் வராத ரூ. 1.60 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தாம்பரம், பெரியார் நகர் அலுவலகங்களில் இருந்து 54,370 ரூபாய் என மொத்தம் 2.15 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், விலையை உயர்த்தி விற்கப்பட்ட பொருள்களின் பணமா? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் மீண்டும் தலைதூக்கும் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details