- 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் 23.37 கோடி செலவில் வழங்கப்படும்.
- வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூபாய் 55 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகள் வாங்கிட மானியம் வழங்கப்படும்.
- 10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் மற்றும் முதுநிலை பட்ட மாணாக்கருக்கு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தேவையான பயிற்சிகள் ரூபாய் 10 கோடி செலவில் வழங்கப்படும்.
- 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ 2.50 கோடி செலவில் மதிப்புக் கூட்டப்பட்ட தொழில் திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும்.
- 200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க ரூபாய் 10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்.
- பழுதடைந்துள்ள 10 ஆதிதிராவிடர் பள்ளி மாணாக்கர் விடுதிகளுக்கு ரூபாய் 45.45 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டடங்கள் கட்டப்படும்.
- வாடகை கட்டடங்களில் பழுதடைந்த கட்டடங்களில் இயங்கி வரும் 5 ஆதிதிராவிட மாணாக்கர் கல்லூரி விடுதிகளுக்கு ரூபாய் 28.35 கோடி செலவில் புதிய விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 6 மேல்நிலைப்பள்ளிகள் ரூபாய் 16.26 கோடி செலவில் மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
- 11 மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளின் ரூபாய் 17 கோடி மதிப்பீட்டில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
- 83 ஆதி திராவிடர் நல மாணவியர் விடுதிகளுக்கு ரூபாய் 10.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.
- 500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 7.50 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் வாங்கி ரூபாய் 2.25 கோடி மானியம் வழங்கப்படும்.
- 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் விற்பனை முகவராக ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் விற்பனை நிலையம் அமைக்க ரூபாய் 90 லட்சம் மானியம் வழங்கப்படும்.
- 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு ரூபாய் 1.50 கோடி மதிப்பீட்டில் ஆவின் பாலகம் அமைக்க ரூபாய் 45 லட்சம் மானியம் வழங்கப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
- 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தீவன புல் வளர்ப்பு கவிதைத் தொகுப்பு மற்றும் புல் கரணைகள் ரூபாய் 1 கோடி செலவில் வழங்கப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் ஆண்டு வருமான உச்சவரம்பு 3 லட்சமாக உயர்த்தப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கான தொழில்நுட்ப பொருளாதார ஆய்வு மூலம் ரூபாய் 1.00 கோடி செலவில் திட்ட அறிக்கை வங்கி ஏற்படுத்தப்படும்.
- 7 மாவட்டங்களில் உள்ள 88 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கு ரூபாய் 9.24 கோடி மதிப்பீட்டில் வைப்பு அரையுடன் கூடிய புதிய சமையல் அறைகள் கட்டப்படும்.
- 305 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளுக்கு தேவையான அறைகலன்கள் மற்றும் தளவாட பொருட்கள் ரூபாய் 7.46 கோடி செலவில் வழங்கப்படும்.
- ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு ரூபாய் 5.70 கோடி செலவில் கழிவறை மற்றும் குளியல் அறைகள் கட்டப்படும்.
- 126 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அறிவியல் ஆய்வகங்களுக்கு ரூபாய் 3.15 கோடி மதிப்பீட்டில் ஆய்வு உபகரணங்கள் வழங்கப்படும்.
- ஏழு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி மாணாக்கர் விடுதிகள் 3.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்படும்.
- 5 ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் கலை பாடப்பிரிவுகள் பொம்மை 1.68 கோடி மதிப்பீட்டில் புதிதாக தொடங்கப்படும்.
- 104 ஆதிதிராவிடர் நல விடுதிகள் மற்றும் 128 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும் ரூபாய் 1.15 கோடி செலவில் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
- 13 மகாத்மா காந்தி தொழிலாளர்கள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூபாய் 1.96 கோடி மதிப்பீட்டில் சுகாதார அங்காடிகள் அமைக்கப்படுவதற்கு ரூபாய் 98.00 லட்சம் மானியம் வழங்கப்படும்.
- பழங்குடியினர் வருவாய் ஈட்டும் பொருட்டு உன்னிகுச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரிக்க ரூபாயை 1.80 கோடி செலவிடப்படும்.
- தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் பழங்குடியினர் நல வாரியம் ஆகிய வாரியங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் இதர நல வாரியங்களில் வழங்கப்படும் உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்கப்படும்.
- 50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணக்கர் விடுதிகளில் நூலகங்கள் மற்றும் இணைய வழியில் நூலகங்கள் ரூபாய் 70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்லூரி மாணக்கர் மற்றும் இளைஞர் களுக்கு நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி ரூபாய் 50 லட்சம் செலவில் வழங்கப்படும்.
- 90 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளில் ரூபாய் 50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணக்கர் விடுதிகளில் ஆண்டிற்கு 3 முறை மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும்.
- 20 ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகள் மற்றும் 2 பழங்குடியினர் நல கல்லூரி விடுதிகளில் ரூபாய் 15 லட்சம் செலவில் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்படும்.
- அழிவின் விளிம்பில் உள்ள 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாச்சாரங்கள் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒளி ஒலி ஆவணமாக பதிவு செய்யப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முக்கிய அறிவிப்புகள் - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 33 புதிய அறிவிப்புகளை, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார். அவை பின்வருமாறு.
![ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் முக்கிய அறிவிப்புகள் Department of Adi Dravidar and Tribal Welfare Announcements on behalf of Adi Dravidar and Tribal Welfare Adi Dravidar and Tribal Welfare Adi Dravidar and Tribal Welfare Announcements tamil nadu assembly தமிழ்நாடு சட்டப்பேரவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அறிவிப்புகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15210150-thumbnail-3x2-kayal.jpg)
கயல்விழி செல்வராஜ்