குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களில் 25 விழுக்காடு, மாணவர்களை சேர்ப்பதற்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 18 ஆம் தேதி வரையில்இணையதளம் மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் 2013-14 ஆம் கல்வியாண்டு முதல் 2018-19ஆம் கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் 2019-20 ஆம் கல்வியாண்டில் 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது,
தொடக்கநிலை வகுப்புகளின் (எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பு) பள்ளிகளில்மொத்தமுள்ள 25 விழுக்காடு இடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்புவதற்குபள்ளியின் தகவல் பலகையில் அறிவிப்பு செய்ய வேண்டும். இதற்கு பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும்.