கரூர் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாமலை. தனது கிராமத்திலேயே இளங்கலை பட்டப்படிப்பு படித்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், ஐஐஎம் லக்னோவின் எம்பிஏ படித்தார். இதன் பிறகே இவர் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
அதன் பிறகு, கர்நாடகாவில் ஐபிஎஸ்ஆக பணியாற்றினார். கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியிலிருந்து ராஜினாமா பெற்று, தனது சொந்த ஊரில் விவசாயம் செய்தார்.
'Stepping Beyond Khaki: Revelations of a Real-Life Singham' என்ற நூலை எழுதியுள்ளார். கடந்தாண்டு ஆகஸ்ட்டில் பாஜாகவில் இணைந்த அண்ணாமலை, அக்கட்சியின் மாநிலத் துணை தலைவர் பதவியைப் பெற்றார்.