சென்னை: தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவதற்கான கூட்டத்தில், சரியான உள்கட்டமைப்பு வசதிகள், நூலகம், ஆய்வகம் உள்ளிட்டவைகளை கொண்ட கல்லூரிகளுக்கே தொடர் அங்கீகாரம் அளிக்கும் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்தாண்டு 80 பொறியியல் கல்லூரிகளுக்கே தொடர் அங்கீகாரம் அளிக்கப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று (ஜூலை 27) தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தரமற்ற 80 கல்லூரிகளின் உட்கட்டமைப்புகளை ஆய்வு செய்ய உள்ளதாக தேசிய தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.
குறையும் மாணவர் சேர்க்கையால் பாழாகும் பொறியியல் கல்வி: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (All India Council for Technical Education - AICTE) அறிவுரையின் படி உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், பொறியியல் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் சேர்க்கையும் குறைவாக இருக்கின்றது. இதனால், மாணவர்களுக்கு தரமான கல்வி கற்பிக்க முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு வேலை கிடைப்பதிலும் சிரமம் உள்ளது.
இதையும் படிங்க: கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மூன்றாமிடம்; ஆடு மேய்க்கும் தொழிலாளியின் மகள் சாதனை!