தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மிக்ஜாம் எதிரொலி - அண்ணா மற்றும் சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு! - Madras University

Two University Exam Postponed: மிக்ஜாம் புயல் காரணமாக டிச.4 முதல் டிச.9 வரை நடைபெற இருக்கும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வுகளும், டிச. 5 முதல் டிச.8 வரை நடைபெற இருக்கும் சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது என இரு பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுபாடு அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

Two University Exam Postponed
இரு பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 4, 2023, 5:09 PM IST

Updated : Dec 4, 2023, 7:39 PM IST

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று, நாளையும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. மேலும், புயல் இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில், தொடர்ந்து கன மழையானது பெய்து வருகிறது.

இந்த மிக்ஜாம் புயல் நாளை (டிச.5) நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தால் நடைபெற இருந்த பொறியியல் தேர்வுகள் இன்றும், நாளையும் ஒத்திவைக்கப்படுகிறது என அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் அறிவித்தார். இதன் புதிய கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்பொழுது புயலின் காரணமாக, இன்று (டிச. 4) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், டிச.4 முதல் டிச.9 வரை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடைபெற இருக்கும் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது எனவும், இதற்கான புதிய கால அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.

அதேபோல், சென்னை பல்கலைக்கழகத்தால் டிச. 5ஆம் தேதி முதல் டிச.8 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இளநிலை மற்றும் முதுகலை பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது என்றும், இதற்கான புதிய கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திருவட்டார் கோயில் நகைகள் காணாமல் போன வழக்கு: நீதிபதி சரமாரி கேள்வி..

Last Updated : Dec 4, 2023, 7:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details