தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

G20 உள்நாட்டு மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் என்ன பேசப்பட்டது? - 3rd G20 Sustainable Finance

ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியில் நடந்த மூன்றாவது ஜி20 நீடித்த நிதிக்கான செயற்குழு (FWG) கூட்டத்தை முன்னிட்டு உள்நாட்டு மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 18, 2023, 11:07 PM IST

சென்னை: மூன்றாவது ஜி-20 நீடித்த நிதிக்கான செயற்குழு (FWG) கூட்டத்தை முன்னிட்டு சென்னை ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியில் (Reserve Bank Staff College) ஜி20 உள்நாட்டு மக்கள் தொடர்பு நிகழ்ச்சி நேற்று (ஜூன் 17) நடைபெற்றது. இந்த 3வது ஜி20 நீடித்த நிதிக்கான செயற்குழு (SFWG) கூட்டமானது, ஒரு நிலையான எதிர்காலத்தை அடைவதற்கான நோக்கத்தோடு உள்நாட்டு மக்கள் உடனான தொடர்பை ஏற்படுத்தும் விதமாக இக்கூட்டம் நடைபெற்றது.

மாமல்லபுரத்தில் 3வது ஜி 20 நிலையான நிதி செயற்குழு (SFWG) கூட்டத்திற்கு (3rd G20 Sustainable Finance Working Group at Mamallapuram) முன்னதாக, சென்னை ரிசர்வ் வங்கி பணியாளர் கல்லூரியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் கீது ஜோஷி வரவேற்புரை வழங்கினர். ஜி 20 மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக ஜி20 இந்திய தலைமையின் கீழ், நீடித்த நிதிக்கான செயற்குழுவால் எடுக்கப்பட்ட முன்னுரிமைகள் அமைந்தது.

பருவநிலை நடவடிக்கைகள் மட்டுமல்லாது அதற்கும் அப்பாற்பட்ட காரணங்களுக்காகவும் நிதி திரட்டுதல் மற்றும் நிலையான நிதியை அளவிடுவதற்கான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை இதில் அடங்குவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பட்டறையில் இந்தியாவில் சமூக தாக்க முதலீட்டை அதிகரிப்பது, அனுபவப் பகிர்வு மற்றும் நீடித்த நிதிக்கான சுற்றுச்சூழல் அமைப்பின் திறனை வளர்ப்பது குறித்து இரண்டு குழுக்களாக விவாதங்கள் நடைபெற்றன. குழு விவாதங்களை ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் பிரிஜ் ராஜ் நடத்தினார். குழுவில் மூத்த தொழில் வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சமூக தாக்க முதலீடுகள், சமூக திட்டங்களுக்கு தனியார் மூலதனத்தை ஈர்ப்பது மற்றும் சமூகப் பங்கு பரிவர்த்தனை பற்றிய விவாதங்கள் முதன்முறையாக எடுத்துக்கொள்ளப்பட்டன. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் எவ்வாறு ஒரு நிலையான எதிர்காலத்திற்காக ஒத்திசைவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் முன்னோக்கிச் செல்ல இணைந்து செயல்பட முடியும் என்பது பற்றிய விவாதமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், இக்கூட்டத்தில் விழிப்புணர்வுக்கான திறன் மேம்பாடு மற்றும் நிலையான நிதியுதவிக்கான சுற்றுச்சூழலைக் கட்டியெழுப்புவதில் சந்தையாளர்களின் செயலில் பங்கேற்பதற்கான உத்வேகமும் விவாதிக்கப்பட்டது. பயிலரங்கில் உள்ள குழுக்கள், ஒழுங்குமுறைகள், கொள்கை வகுப்பதில் உள்ள முன்னேற்றங்கள், நேர்மறையான சமூக தாக்கங்களுக்கு தனியார் நிதி திரட்டுவதற்கான வெற்றிக் கதைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்வில் 200 பேர் பங்கேற்றுள்ளனர். இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் அதிகாரிகள் உமா சங்கர், மண்டல இயக்குநர், (RBI), K.பாபுஜி முதல்வர் - (RBSC), அமித் சின்ஹா, பொது மேலாளர், ரிசர்வ் வங்கி உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Wrestlers Protest: "சாக்ஷி மாலிக் காங்கிரஸின் கைப்பாவையாக உள்ளார்" - பபிதா போகத் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details