தமிழ்நாட்டில் ஒருபுறம் தேர்தல் பரபரப்பு நிலவி வருகிறதென்றால் மற்றொருபுறம் சசிகலாவின் வருகை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக, அதிமுக என அனைத்து கட்சிகளும் அவரது வருகையால் தமிழக அரசியலில் எவ்வித மாற்றமும் உண்டாகாது எனக் கூறினாலும் ஒருவித தயக்கத்துடனே செயல்பட்டு வருகின்றனர்.
சசிகலாவின் வருகை குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ஒவ்வொரு செயலையும் அரசியல் தலைவர்களும், மக்களும் கவனித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தரம் தாழ்ந்த தனிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? எனக் குறிப்பிட்டு அண்ணாவின் வரிகளை பதிவிட்டுள்ளார்.