இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்துவருகிறது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை புயலாக வலுவடைய கூடும். அதன்படி அந்தப்புயல் வரும் 17ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, 18ஆம் தேதி வடகிழக்கு திசையில் நோக்கிச் செல்லும். அந்த காலகட்டத்தில், சூறாவளி காற்று 75 முதல் 85 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும், அதிகபட்சமாக 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.