சென்னை, மடிப்பாக்கத்தில் உள்ள கலைமகள் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியின் நிறுவனர் பெருமாள். இப்பள்ளியின் நிர்வாகிகளாக பெருமாளும் அவரது வாரிசுகளும் உள்ளனர். இந்நிலையில் பெருமாள், அவரது மூத்த மகன் பால முருகன் ஆகியோர் மீது, இளைய மகன் வெங்கட்ராமனின் மனைவி தேவி என்பவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரில் கூறியதாவது, "கலைமகள் வித்யா மந்திர் பள்ளியின் நிறுவனரான பெருமாளும், அவரது மூத்த மகன் பால முருகனும் சேர்ந்து பள்ளி ஆசிரியைகள், மாணவிகள், பள்ளியில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். நான் அந்தப் பள்ளி நிர்வாகத்தில் பணியாற்றியபோது இது தெரியவந்தது.