தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளக்குறிச்சி மாணவியின் மறுபிரேத பரிசோதனைக்கு பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் - kallakurichi student death issue

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு செய்யலாம் என அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Chennai High Court
Chennai High Court

By

Published : Jul 19, 2022, 2:53 PM IST

Updated : Jul 19, 2022, 3:26 PM IST

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றத்தில் நேற்று(ஜூலை 18) உத்தரவிட்டதன் அடிப்படையில் அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்தது. இதற்கிடையில் தங்கள் தரப்பு மருத்துவரை உடற்கூராய்வு குழுவில் சேர்க்கக்கோரியும், அதுவரை உடற்கூராய்வுற்குத் தடை விதிக்கக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை மாணவியின் பெற்றோர் தரப்பில் முறையிடப்பட்டது.

ஆனால், வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும், உடற்கூராய்விற்குத் தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பெற்றோர் எங்கு இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என்றும், உடற்கூராய்வு நிபுணர்கள் வந்துவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய பிறகு பெற்றோர் தரப்பு இல்லாமல் உடற்கூராய்வு செய்யலாமா என தெளிவுபடுத்த வேண்டுமென முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காதது குறித்தும் தெரிவித்தார்.

இதையடுத்து பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு செய்யலாம் என அனுமதியளித்த நீதிபதி, பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மறுபிரேத பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

Last Updated : Jul 19, 2022, 3:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details