தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பணத்தை வெள்ளம்போல் அள்ளித் தெளிக்கும் திமுக' -அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணி, மக்களின் கொள்கைகளை நம்பாமல் பணத்தை வெள்ளம்போல் அள்ளித் தெளிக்கிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

By

Published : Apr 3, 2019, 3:57 PM IST

அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை கிண்டியில் இந்தியத் தேர்தல் அதிகாரிகள் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அதிமுக சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

இதன்பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சுதந்திரமாக, நேர்மையான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியினர் மக்களின் கொள்கைகளை நம்பாமல் பணத்தை வெள்ளம்போல் அள்ளித் தெளித்து குறுக்கு வழியில் வெற்றி பெற முயல்கிறது.

கோடநாடு விவகாரத்தில் தனி நபரை விமர்சனம் செய்யக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருகிறார்.

பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரி ஆவணங்கள் கிடைத்துள்ளது. இதை விட வேறு என்ன ஆவணம் வேண்டும். நான்கு தொகுதிகளின் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான தேதி எப்போது அறிவிக்கப்பட்டாலும் களத்தில் இறங்க தயாராக உள்ளோம்' என அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details