தமிழ்நாடு

tamil nadu

போகி: புகை மூட்டத்துடன் காணப்படும் சென்னை!

By

Published : Jan 14, 2020, 10:56 AM IST

சென்னை: போகிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் நேற்று நள்ளிரவு முதல் பழைய பொருட்களை எரித்ததால் இன்று அதிகாலை முதல் சென்னை மாநகர் முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்படுகிறது.

புகை மூட்டத்துடன் காணப்படும் சென்னை
புகை மூட்டத்துடன் காணப்படும் சென்னை

போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்கள், தேவை இல்லாத பொருட்களைத் தீயிட்டு கொளுத்த வேண்டாம் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளை மேற்கொண்டது. இருப்பினும் இன்று சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை முதல் சென்னை மாநகர் முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் காற்றின் தரக் குறியீடு மோசமாக உள்ளது. காற்றில் உள்ள நுண் துகள்கள் (PM 2.5) சென்னை மணலியில் 795 என அபாயகர அளவில் உள்ளது. சென்னை அமெரிக்கக் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் காற்றிலுள்ள நுண் துகள்கள் 595 என்ற அளவில் அபாயகரமாக உள்ளது.

மாசுபாடு குறித்த புள்ளி விவரங்கள்

ஆலந்தூர் பகுதியில் ஆரோக்கியமற்றது என்பதைக் குறிக்கும் 161 என்ற அளவிலும், வேளச்சேரி பகுதியில் குறைந்தபட்சமாக காற்றில் உள்ள நுண் துகள்கள் 100 என்ற அளவிலும் உள்ளன. சென்னையில் ஏற்பட்ட காற்று மாசால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், குழந்தைகள், வயதானவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

புகை மூட்டமாக காணப்படும் சென்னை

இதையும் படிங்க: புகையில்லா போகியை வலியுறுத்தி மாணவர்கள் பேரணி

ABOUT THE AUTHOR

...view details