சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியா்களின் குடும்பத்தினா், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காா்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருப்பவர்கள் உள்ளிட்ட அமெரிக்கா்கள் கரோனா வைரஸ் பரவல் பீதி காரணமாக தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்திருந்தனர்.
ஆனால், கரோனா வைரஸ் பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அறிவித்ததையடுத்து, வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிற்குள் வருவதற்கும், வெளிநாடுகளுக்கு விமானங்கள் செல்லவும் கடந்த மாதம் 22 ஆம் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு செல்ல நினைத்தவர்கள் இங்கேயே இருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அமெரிக்க தூதரக அலுவலர்கள் இந்திய அரசுடன் பேசி, தங்கள் நாட்டிற்கு செல்ல சிறப்பு அனுமதி பெற்றனா். அதன்படி மும்பையிலிருந்து ஏா்இந்தியா சிறப்பு விமானம் நேற்று மாலை 3.55 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடைந்தது.