சென்னையில் உயர்கல்வி தரத்தினை உயர்த்துவது குறித்தும், புதிய கல்விக் கொள்கை குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் குழு தலைவர் அனில் சகஷ்ரபுத்தே, 'உயர்கல்வி படிப்பவர்கள் ஆராய்ச்சியை நோக்கிச் செல்வது அதிக அளவிலிருந்தாலும், தரமான முறையில் இருப்பது அவசியமாகும். தரமான ஆராய்ச்சி வளர்ப்பதற்கு அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதையடுத்து, ஏற்கனவே அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம் 30% குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளோம். தற்போது மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கல்லூரிகளும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் கல்லூரிப் படிப்புடன் தொழில் சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும்.