தமிழ்நாடு

tamil nadu

தாயைக் கொன்ற அதிமுக எம்பியின் மகன் கைது!

சென்னை: சொத்துக்காக சொந்த அம்மாவை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் எம்பி குழந்தை வேலுவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

By

Published : Jul 30, 2019, 11:20 PM IST

Published : Jul 30, 2019, 11:20 PM IST

தாயைக் கொன்ற அதிமுக எம்பியின் மகன் கைது!

அதிமுக முன்னாள் எம்பி குழந்தை வேலுவின் மனைவி ரத்தினம்(63). இவரது மகன் பிரவீன் (35). சொத்துப் பிரச்னை காரணமாக ரத்தினத்தை சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் வைத்து கத்தியால் குத்தி பிரவீன் கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க அவர் தலைமறைவானார்.

கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்த பிரவீனை, காவல்துறை 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தது. இந்நிலையில், பிரவீனை டெல்லியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர், விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு, அடையாறில் உள்ள துணைக் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details