தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரும் 12ம் தேதி முதல் தமிழ்நாட்டிற்குள் 3 சிறப்பு ரயில்கள் இயங்கும்! - latest TamilNadu news

சென்னை: வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் தமிழ்நாட்டிற்குள் மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Additional special train services for Trichy, Chengelpet, Kovai begins from June 12
Additional special train services for Trichy, Chengelpet, Kovai begins from June 12

By

Published : Jun 9, 2020, 5:04 PM IST

திருச்சி-செங்கல்பட்டு, செங்கல்பட்டு-திருச்சி, அரக்கோணம்-கோவை அதிவிரைவு சிறப்பு ரயில்கள் வரும் 12ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில், அரியலூர், விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக காலை 11 மணிக்கு செங்கல்பட்டுக்குச் சென்றடைகிறது.

மீண்டும் அங்கிருந்து 4.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 9.05 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. 2 ஏசி பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளுடன் நாள்தோறும் இந்தச் சேவை இயக்கப்படுகிறது. அதேபோல், ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி உள்பட 23 பெட்டிகளுடன் தினமும் செங்கல்பட்டிலிருந்து திருச்சி வரை ரயில் இயக்கப்படவுள்ளது.

அதேபோல், அரக்கோணம்-கோவை அதிவிரைவு சிறப்பு ரயில், 2 ஏசி பெட்டிகள் உள்பட 24 பெட்டிகளுடன் நாள்தோறும் காலை 7 மணிக்கு அரக்கோணத்திலிருந்து புறப்பட்டு, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக மாலை 2.05 மணிக்கு கோவை செல்கிறது. மீண்டும் அங்கிருந்து 3 மணிக்குக் கிளம்பி இரவு 10 மணிக்கு அரக்கோணத்தை அடைகிறது.

இந்த மூன்று சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக குளிர்சாதன வசதியை மக்கள் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படும் நிலையில், சிறப்பு ரயில்கள் ஏசி பெட்டிகளுடன் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் - தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு!

ABOUT THE AUTHOR

...view details