தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 4, 2022, 6:11 AM IST

ETV Bharat / state

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கூடுதல் தலைமை ஆசிரியர் கைது

திருவேற்காட்டில் கூடுதல் தலைமை ஆசிரியர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் கூடுதல் தலைமை ஆசிரியர் கைது
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் கூடுதல் தலைமை ஆசிரியர் கைது

சென்னை:திருவேற்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் கூடுதல் தலைமை ஆசிரியராக 49 வயதுடைய ஒருவர் பணியாற்றிவந்தார். இவர் தனது வகுப்பில் பயிலும் மாணவிகளின் கையைப் பிடித்து போர்டில் எழுத வைப்பதும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதுமாக இருந்து வந்தார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அதனடிப்படையில் பெற்றோர் போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை பிடித்து விசாரித்தபோது மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூடுதல் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details