தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 24, 2020, 6:43 PM IST

ETV Bharat / state

முதலமைச்சரை சந்தித்த அரசின் தலைமை வழக்குரைஞர்கள்!

சென்னை : தமிழ்நாடு அரசின் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குமரேஷ் பாபு மற்றும் ஸ்ரீ சரண் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

Additional Attorney General of Tamilnadu meet CM  Edappadi Palanisamy
Additional Attorney General of Tamilnadu meet CM Edappadi Palanisamy

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக குமரேஷ் பாபு மற்றும் ஸ்ரீ சரண் ஆகியோரை நியமித்து, தலைமைச் செயலர் சண்முகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ள இருவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details