தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தை, மகன் தீ விபத்தில் உயிரிழப்பு - தற்கொலையா என போலீசார் விசாரணை - ஆதம்பாக்கம் பாலாஜி நகர் அடுக்குமாடி குடியிருப்பு

சென்னை: ஆதம்பாக்கத்தில் தந்தை, மகன் தீ விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில், இது தற்கொலையா அல்லது விபத்தா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை
சென்னை

By

Published : Dec 14, 2020, 7:39 PM IST

சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகர், 6ஆவது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் வசித்துவருபவர் பாரி (45). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் பாலமுருகன் (11). இன்று மாலை இருவரும் வீட்டில் இருந்தபோது வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. அலறல் சத்தமும் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் கிண்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் தந்தையும், மகனும் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததனர். இதையடுத்து ஆதம்பாக்கம் போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

தீ விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு

தந்தையும், மகனும் தீ விபத்தில் உயிர் இழந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக தந்தையும், மகனும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனரா அல்லது மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டு இறந்தார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகை சித்ரா தற்கொலை! - தாய், தந்தையிடம் ஆர்டிஓ விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details