தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 7:02 AM IST

ETV Bharat / state

6 மாத சிறை தண்டனையை எதிர்த்து நடிகை ஜெயப்பிரதா வழக்கு; இஎஸ்ஐ நிறுவனம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Actror Jayaprada: திரையரங்க தொழிலாளர்களின் இ.எஸ்.ஐ பணத்தை செலுத்தாததால் விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி நடிகை ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கில் இ.எஸ்.ஐ நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பிரபல நடிகை ஜெயப்பிரதா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் சென்னை அண்ணா சாலையில் ராம்குமார், ராஜ்பாபு ஆகியோருடன் இணைந்து திரையரங்கம் ஒன்றையும் நடத்தி வந்தார்.

அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களிடம் நவம்பர் 1991 முதல் 2002 வரை 8 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயும், 2002 முதல் 2005 வரை 1 லட்சத்து 58 ஆயிரமும், 2003இல் வசூலித்த இ.எஸ்.ஐ பணத்தை தொழிலாளர்கள் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பாக இ.எஸ்.ஐ நிறுவனம் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் 5 வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, தொழிலாளர்கள் காப்பீட்டு பணத்தை திரும்பச் செலுத்தி விடுவதாக ஜெயப்பிரதா சார்பில் கூறப்பட்டது. அதேநேரம், இ.எஸ்.ஐ பணத்தை சரியாக செலுத்தாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இ.எஸ்.ஐ நிறுவனம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத 6 மாத சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்நிலையில், எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஜெயப்பிரதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், இ.எஸ்.ஐக்குச் செலுத்த வேண்டிய பாக்கி 37 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை செலுத்தி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இ.எஸ்.ஐ நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 18ஆம் தேதிக்கு ஒத்த வைத்துள்ளார்.

இதையும் படிங்க:லியோ இசை வெளியீடு விழாவுக்கு மீண்டும் அனுமதி?.. நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கூறியது என்ன?

ABOUT THE AUTHOR

...view details