சென்னை: நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அடுத்த நாள் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
இதையடுத்து ஏப்ரல் 17ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தடுப்பூசியால் மரணம்?
கரோனா தடுப்பூசி செலுத்தியதால்தான் விவேக் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டது. மருத்துவமனை நிர்வாகமும், தமிழ்நாடு சுகாதாரத் துறையும் தடுப்பூசியால் அவர் உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்தனர்.