'சர்வதேச அமைதி தமிழ் பல்கலைக்கழகம்' சார்பில் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் வைத்து பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சென்னை மாவட்ட நீதிபதி என்.வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.
அப்போது 2020 - 2021ஆம் ஆண்டு கரோனா காலங்களில் மக்களுக்கு சேவை செய்ததற்காக நடிகர் விஜய் விஸ்வாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் கமலம் குழுமம் சேர்மன் ஜே.கே. முத்து, மங்கையர்கரசி பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.கார்த்திகேயன், ஏ.கே.ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.