தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளி ! - காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளி

சென்னை : கைவிலங்குடன் காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய போக்சோ குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்தனர்.

Accused arrest
Accused arrest

By

Published : Dec 10, 2019, 10:16 PM IST

சென்னை, மண்ணடி, அங்கப்பன் சாலை பிளாட்பாரத்தை சேர்ந்தவர் அருண்(25). இவர் குப்பை பொறுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த எட்டாம் தேதி குடிபோதையில் இருந்த அருண், அதே பகுதியைச் சேர்ந்த, இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைக்கண்ட பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர், அருணை போக்சோ சட்டத்தில் கைது செய்து, கைவிலங்கு அணிவித்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அப்பொழுது, நேற்று முன்தினம் திடீரென பின்பக்க கதவு மேல் ஏறி, அங்கிருந்த இடைவெளி வழியாக அருண் கைவிலங்குடன் தப்பி ஓடினார்.

இதனையடுத்து, தலைமறைவான அருணை, பாரிமுனை பகுதியில், வடக்கு கடற்கரை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் மண்ணடி, தம்பு செட்டி தெருவில் பதுங்கி இருந்தவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:

தாய்லாந்தில் நடந்த யோகா: தங்கம், வெள்ளி வென்று தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details