சென்னை தண்டையார்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு சொந்தமாக சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தில் மூன்று கடைகள் இயங்கிவருகின்றன.
திருவொற்றியூர் நெடுஞ்சாலை முழுவதும் மெட்ரோ அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று திடீரென்று மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடத்தில் மணல் சரிந்து கட்டடத்தின் மேல் விழுந்ததில் இந்த கட்டடத்தில் பேக்கரி கடை நடத்தி வரக்கூடிய சுனில் குமார்(36) என்பவரின் கடை இடிந்து விழுந்து சேதமடைந்தது.