சென்னை: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (32). இவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா போலீசில், பாலியல் வன்புணர்வு மற்றும் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை லூதியானா போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தலைமறைவானார். இதனிடையே அவர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சி செய்துவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் லூதியானா போலீசார் தினேஷ் குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனர். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து இலங்கையின் தலைநகர் கொழும்பு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொழும்புக்கு புறப்பட தயாரானது. இந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர்.