தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பால் கலப்பட வழக்கு: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க மனு! - தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பு

சென்னை: ஆவின் பால் கலப்பட வழக்கை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Chennai high court

By

Published : Oct 14, 2019, 9:27 PM IST

கடந்த 2014ஆம் ஆண்டு, ஆவின் பாலை விநியோகம் செய்யும் லாரிகளை இயக்கிவந்த ஒப்பந்ததாரர்கள் பாலை கொண்டு செல்லும் வழியிலேயே அதனை திருடிவிட்டு அதற்குப் பதிலாக தண்ணீரைக் கலப்படம் செய்வதால் ஆவின் நிறுவனத்திற்கு நாளொன்றுக்கு 23 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டு ஒப்பந்ததாரர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், ”2014ஆம் ஆண்டு ஆவின் பாலில் கலப்படம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட எட்டு ஆவின் நிறுவனப் போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்குத் தொடர்பான முழுமையான ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளிவைத்தது.

இதையும் படிங்க:

நாமக்கல் ஐ.டி. ரெய்டு - மாணவர்களிடம் முறைகேடாக வசூலித்த ரூ. 30 கோடி பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details