சென்னை தங்கசாலை அரசு அச்சகம் அருகே ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் எஸ்.ஏ.என். வசிகரன் தலைமையில் ஊழலை ஒழிக்க துடைப்பம் யாத்திரை துவக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த யாத்திரையில் ஏராளமான கட்சி தொண்டர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
ஊழலை ஒழிக்கவும், லஞ்சம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம், துடைப்பத்தை வைத்து வீட்டை சுத்தம் செய்யவதைப்போல நாட்டையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் யாத்திரை துவங்குவதாக மாநிலத் தலைவர் வசீகரன் தெரிவித்தார்.