பெரியார் பெருந்தொண்டரும் பெரியாரின் படைப்புகள் முழுவதையும் தொகுத்து சமுதாயத்திற்கு வழங்கியவருமான பேரறிஞர் ஐயா வே. ஆனைமுத்து (96) நேற்று (ஏப்.6) இயற்கை எய்தினார்.
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்பட ஏராளமான கட்சித் தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.