தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 1, 2023, 12:16 PM IST

ETV Bharat / state

சென்னை: பேருந்தில் டிக்கெட் எடுக்கவில்லை என பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்!

சென்னையில் பேருந்தில் டிக்கெட் எடுக்கவில்லை என டிக்கெட் பரிசோதகர், பயணி ஒருவரை சட்டையை கிழித்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேருந்தில் டிக்கெட் எடுக்கவில்லை என பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்.
பேருந்தில் டிக்கெட் எடுக்கவில்லை என பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்.

பேருந்தில் டிக்கெட் எடுக்கவில்லை என பயணியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்.

சென்னை:மறைமலைநகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 22). இவர் அடையாற்றில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கிண்டியிலிருந்து திருவான்மியூர் நோக்கிச் செல்லும் 78 எண் கொண்ட பேருந்தில் பயணம் செய்து உள்ளார். அப்போது சின்ன மலை பேருந்து நிலையம் அருகே பேருந்தானது சென்ற போது டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் ஏறி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டு வந்து உள்ளனர்.

அப்போது தினேஷிடம் டிக்கெட்டை பரிசோதித்த போது இல்லாததால், அவரிடம் டிக்கெட் குறித்துக் கேட்டு உள்ளனர். அதற்குத் தான் முந்தைய பேருந்து நிறுத்தத்தில் ஏறியதாகவும், பேருந்தில் அதிகப்படியான கூட்ட நெரிசல் இருந்ததால் இடையில் நின்று இருந்த பயணிகளிடம் பணத்தைக் கொடுத்து டிக்கெட் எடுக்க கூறியிருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஆனால் இதனைச் சற்றும் காதில் வாங்காத டிக்கெட் பரிசோதகர் ஒருவர் தினேஷை இழுத்து பேருந்தை விட்டு கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கி உள்ளனர். மேலும் சக பயணிகள் கூறியும் கேட்காத பரிசோதகர் தினேஷை தகாத வார்த்தையால் பேசி செல்போன் மற்றும் உடைமைகளைப் பறித்து உள்ளனர். இதை அடுத்து சக பயணிகள் பரிசோதகரைத் தடுத்து நிறுத்தி தினேஷை மீட்டு உள்ளனர்.

தற்போது டிக்கெட் பரிசோதகர் தினேஷை தாக்கியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிக்கெட் எடுக்கத் தவறினால் அதற்கு ஏற்ற அபராதத்தை வசூலிக்க வேண்டுமே தவிரப் பயணிகள் மீது தாக்குதல் நடத்துவது தவறு என கடும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தினேஷ், தன்னை தாக்கிய டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் போலீசார் தங்களது முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர். இது மட்டும் இல்லாமல் டிக்கெட் பரிசோதகரிடம் துறை ரீதியான விசாரணையையும் நடந்து வருகிறது.

இதையும் படிங்க:மின்சாரத்துறை ஊழியர் எனக்கூறி போலி மீட்டர் விற்பனை.. எட்டயபுரத்தில் பெண்ணிடம் ரூ.5500 சுருட்டல்!

ABOUT THE AUTHOR

...view details