சென்னை:குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியைச்சேர்ந்தவர், சுந்தர். இவர் அதே பகுதியில் பூந்தொட்டிகளுக்கு நார் மற்றும் உரம் விற்பனை செய்யும் குடோன் வைத்து நடத்தி வருகிறார். தீபாவளிப்பண்டிகை என்பதால் குடோனை பூட்டி விட்டு சென்றுவிட்டார்.
இந்த குடோனில் இருந்து இன்று (அக். 24) காலை புகை வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்குத்தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு பூந்தமல்லி, விருகம்பாக்கம், அம்பத்தூர் ஆகியப்பகுதியிலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீயை சுமார் 1 மணி நேரம் போராடி அவர்கள் அணைத்தனர்.