சென்னை: நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை துணை தூதரகத்தின் முன் இன்று (ஜன.29) காலை 6.45 மணியளவில் திடீரென ஒரு நபர் 'என்னை இலங்கைக்கு அனுப்பிவையுங்கள் , இல்லையென்றால் இந்திய குடியுரிமை வழங்குங்கள்' என கூறி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து இலங்கை துணை தூதரகத்தின் அலுவலர்கள் அந்த நபர் குறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஜாய் (37) என்பதும், தற்போது ராமநாதபுரம் மண்டபத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது.