சென்னை: வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், உத்தண்டி நைனார்குப்பம் பகுதியை சேர்ந்த சியாமளா தேவி தனது தாயாருடன் வந்து புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப்புகாரில், “தனது கணவர் இறப்பை கணவரின் குடும்பத்தினர் மறைத்துவிட்டதாகவும்; கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சியாமளா தேவியின் தாயார் கூறுகையில், “எனது மகள் சியாமளா தேவிக்கும், கும்பகோணத்தை சேர்ந்த சரவணனுக்கும், கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சரவணன் பெங்களூருவில் ஐடி துறையில் பணிபுரிந்தார்.