தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 7, 2021, 7:55 AM IST

ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள்: சிறைப்பிடித்த பொதுமக்கள்

சென்னை: வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை பொதுமக்கள் சிறைப்பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

booth box

சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த பணியாளர்கள் மூன்று பேர் வேளச்சேரி பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றனர். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை சிறப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்ற நபர்கள்

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை கைப்பற்றினர். பின் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அந்த வாக்குபதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டதா அல்லது இல்லையா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அந்த இயந்திரங்கள் சென்னை, வேளச்சேரி தொகுதிக்கு உள்பட்ட 11ஆவது மண்டலத்தைச் சேர்ந்தவை என்பது தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details