தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 11, 2022, 9:02 PM IST

ETV Bharat / state

முகக்கவசம் அணிவதற்கு எதிர்ப்புத்தெரிவித்த வழக்கு - ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து மனு தள்ளுபடி

தமிழ்நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat முகக்கவசம் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு
Etv Bharat முகக்கவசம் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரிக்கத்தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமெனவும், அவ்வாறு அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தைச்சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், முகக்கவசம் அணிவதால் கரோனாவை கட்டப்படுத்த முடியாது எனவும்; மாறாக முகக்கவசம் சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல் நலக்கோளாறை ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முகக்கவசம் அணியாததால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருப்பது தவறானது எனவும்; 500 ரூபாய் குறைவான தொகையல்ல எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, போதிய ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் தாக்கல் செய்துள்ளதாக குறிப்பிட்டு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து, வழக்கறிஞர் ராமமூர்த்தியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க:'நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன்'- வடிவேலுவின் படத்துடன் விழிப்புணர்வு போஸ்டர்!

ABOUT THE AUTHOR

...view details